

வானவில் மன்றம் சார்பாக தேசிய அறிவியல் விழா கொண்டாடும் பொருட்டு அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி 28 ஆம் நாள் தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு ஏற்படுத்த நம்பியூர் வானவில் மன்ற கருத்தாழகர் முகமது ஜமீலா நஸ்ரின், நதியா மூலமாக மாணவர்களுக்கு கடந்த வாரம் முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் அம்மா வேலுமணி அவர்கள், மற்றும் வட்டார கல்வி ஆசிரியர் பயிற்சிநர்கள் ஆலோசனை படி நம்பியுர் வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் கடந்த வாரம் முதல் தேசிய அறிவியல் தின விழா சிறப்பாக ஒவ்வொரு பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் மூலம் தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தும் உறுதிமொழி, அறிவியல் பாடல், மற்றும் சர் சி வி ராமன் அவர்களின் பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு விளக்கியும் பள்ளியில் வானவில் தொடர்பான செய்முறை செய்து காண்பித்தும் பல்வேறு புதுமையான விளையாட்டு முறைகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு அறிவியல் தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, மாணவர்கள் முதலில் அறிவில் ஆர்வத்தை பெற வேண்டும் என்பதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் எந்த சூழ்நிலையில் கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தினார்கள் என்ற நிலைகளையும் அவர்களுக்கு விளக்கிக் கூறி அவர்கள் பெற்ற நோபல் பரிசு மூலமாக அவர்கள் அடைந்த சிறப்பை கூறுவதன் மூலம் அவர்களுக்கு அறிவியல் ஆர்வம் ஏற்படுத்தப்பட்டது. அரசு நடுநிலைப்பள்ளி குருமந்தூரில் தலைமை ஆசிரியர் திருமதி கலைச்செல்வி அவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் முன்னிலையில் 210-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை வழிபாட்டு கூட்டத்திலும் மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி ஒட்டர்கரட்டு பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி கும்மக்காளிபாளையம் நம்பியூர் ஒன்றியம், மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி அவ்வையார் பாளையம் கோபி ஒன்றியம் முதலிய பகுதிகளில் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் உதவியுடன் வானவில் மன்ற வகுப்பிலும் சிறப்பாக நடத்தப்பட்டது. இதுபோன்று நம்பியுர் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டங்கள் மற்றும் வானவில் மன்ற வகுப்புகளில் மாணவர்களுக்கு அறிவியல் கண்ணோட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது