கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம், வெங்கடேஸ்வரா நர்சிங் கல்லூரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறுவலூர் சார்பில் இலவச ரத்த அழுத்த மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு முகாமை பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப. தங்கவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது,அடிக்கடி இது போன்ற பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வரும் உடல்நல கோளாறுகளை ஆரம்பத்திலேயே சரிப்படுத்திவிடலாம் என்றும் இதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடையே உரையாற்றினார்.
இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கல்லூரியின் இதர ஊழியர்கள், 200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை செய்யப்பட்டது
நிகழ்ச்சியில் நர்சிங் கல்லூரியின் முதல்வர் முத்துக்கண்ணு, பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.பிரகாசம், துறை தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் மதன்குமார் அவர்கள் செய்திருந்தார்.
கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம், வெங்கடேஸ்வரா நர்சிங் கல்லூரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறுவலூர் சார்பில் இலவச ரத்த அழுத்த மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam