நம்பியூரில் தமிழக அரசு சார்பில் நம்பியூர் வட்டாரத்தில் உள்ள கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நம்பியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நம்பியூர் வட்டார மேற்பார்வையாளர் கிருஷ்ணாபிரியா தலைமை தாங்கினார்.
நம்பியூர் பேரூராட்சி துணைத் தலைவர் தீபா தமிழ்ச்செல்வன் முன்னிலை வைத்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்கள் 100 பேருக்கு சேலை, பழங்கள், வளையல் அடங்கிய வளைகாப்பு சீர்வரிசை தட்டு வழங்கினர்.கர்ப்ப காலத்தில் பாதுகாப்புடன் சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான சாதங்கள் பரிமாறப்பட்டது.நிகழ்ச்சியில் நம்பியூர் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் ராமசாமி, வரதராஜ், சாந்தமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.