மத்திய அரசு இன்று தாக்கல் செய்த வக்ஃப் குழு அறிக்கையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் வக்ஃப் சட்ட மசோதா நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு இன்று தாக்கல் செய்த வக்ஃப் குழு அறிக்கையை கண்டித்தும், அதனை ரத்து செய்யகோரியும், பாஜக அரசை கண்டித்தும் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது,இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக அரசை கண்டித்து வக்ஃப் திருத்த சட்ட நகலை கிழித்து எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 க்கும் மேற்பட்டோரை கோபி போலீசார் தடுத்து நிறுத்தினர்.