திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் கானா பாடகி இசைவாணி ஐயப்ப சுவாமியையும் ஐயப்ப பக்தர்களையும் இழிவுபடுத்தி இந்துக்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பக்தர்களுக்கு மிரட்டல் விடுத்தும் பாடியுள்ளார் சம்பந்தப்பட்ட நீலம் பண்பாட்டு மையம் மீதும் பா. ரஞ்சித், பாடகி இசைவாணி மீதும் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட வீடியோவை இணையத்திலிருந்து நீக்க வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் கே சம்பத்குமார் தலைமையில் நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது,.

இதில் எஸ் ராஜேஷ் நம்பியூர் தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் என் கிருஷ்ணன் நம்பியூர் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் எஸ்பி தண்டபாணி நம்பியூர் தெற்கு ஒன்றிய துணை தலைவர் வி செல்வராஜ் நம்பியூர் தெற்கு ஒன்றிய துணை தலைவர் B. மகேந்திரன் நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் A. கலையரசன் நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர்மற்றும் சக்தி, சந்தோஷ் ஆகிய பொறுப்பாளர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் உடன் இருந்தனர்.