மாணவர்களின் முன்னேற்றதிற்கு எப்போதும் துணை நிற்கும் முதல்வராக திராவிட மாடல் முதல்வர் இருக்கிறார், திராவிட மாடல் அரசின் பள்ளி கல்வி துறையின் சீரிய நடவடிக்கையால் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது கோபியில் நடைபெற்ற தமிழ் மாணவர்கள் மன்றம் துவக்க விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.


தமிழகம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மூலம் தமிழ் மொழி, தமிழ் மொழியின் தொன்மை, பெருமை,தமிழர் நாகரீகம், தமிழ் நூல்களின் வரலாறு, தமிழ் நூல்களின் சிறப்புகள் ஆகியவற்றையும் பகுத்தறிவையும் ஊட்டும் வகையில் மாணவ மாணவிகளை பற்று கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் திமுக மாணவர் அணி சார்பிவ் துவங்கப்பட்டது
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தமிழ் மாணவர் மன்றத்தில் சேர்வதின் நோக்கம், தமிழ் மொழிக்கு செய்யும் சேவை, பயன்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.


அப்போது பேச துவங்கிய அவர் பாடலுடன் துவங்கினார், தமிழக வரலாற்றில் இந்தி எதிர்ப்பு போராட்டம், ஈழ தமிழர் போராட்டம், நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் மாணவர்கள் எதிர்ப்பால் தான் வலுவடைந்தது, நமக்கென்ன என இருந்து விடாமல் நாட்டின் போக்கை கண்காணிக்க வேண்டும், உங்கள் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும், உங்களுக்கு உதவ திராவிட மாடல் அரசு உள்ளதுபள்ளிக் கல்வியில் ஆரம்பித்து கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் வரை உணவு முதல் கொண்டு அனைத்தையும் பொறுப்புடன் செயல்படுத்தி தருவது நமது முதல்வரின் திராவிட மாடல் அரசு, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் என மாணவர்களின் முன்னேற்றதிற்காக பார்த்து பார்த்து செய்கின்ற திராவிட மாடல் அரசின் முதல்வர் இருக்கிறார்மாணவர்களின் முன்னேற்றதிற்கு எப்போதும் துணை நிற்கும் முதல்வராக திராவிட மாடல் முதல்வர் இருக்கிறார், நான் முதல்வன் திட்டம் மூலம் பல ஆயிரம் பேர் நல்ல வேளையில் சேர்ந்துள்ளனர்,


திராவிட மாடல் அரசின் பள்ளி கல்வி துறையின் சீரிய நடவடிக்கையால் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, ஒன்றிய அரசு பெண்களுக்கு 50 சதவீதம் 2030 ல் தருவதாக சொல்கின்றனர்ஆனால் மூன்று ஆண்டுக்கு முன்பே 50 சதவீத ஒதுக்கீட்டை தந்து அதனை தாண்டி சென்று கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்தார், விழாவில் மாணவர் மன்ற குழுவினருக்கு தமிழ் மாணவர் மன்ற சான்றிதழ்களை வழங்கினர்25 பேரை கொண்ட குழுவாக ஆரம்பித்து அவரவர் குழுக்கள் தமிழ் மொழிக்கு ஆற்றும் தொண்டினை பதிவு செய்து அடுத்த நிலையை உயர்வடையலாம், எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம், முறையாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து தகுந்த வழிகாட்டுதல்களுடன் இந்த மன்றத்தின் பணி செம்மை படுத்தப்படும், இதன் மூலம் வருங்கால இளைஞர்கள், சந்ததிகளிடையே தமிழ் மொழி பற்றை மாபெரும் வளர்ச்சி அடைய ஒரு புரட்சியாக இது அமையும் என்றார்.