அதிமுக ஆட்சியில் தான் இலங்கை தமிழர்,கச்சத்தீவு பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டது, திமுகவிற்கு மக்கள் யாரும் ஓட்டு போட தயாராக இல்லை..அரசு ஊழியர்களும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர் என கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சரும் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேச்சு,

கோபிசெட்டிபாலையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கள ஆய்வு ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது, இதில் முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சரும் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் வர்கூர் அருணாசலம் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி; பேசுகையில்ஈரோடு மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை, அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்த மாவட்டம் ஈரோடு, இந்த மாவட்டத்திற்கு அனைத்து திட்டங்களும் கடந்த அதிமுக ஆட்சியில் தான் வழங்கபட்டது.திமுக அரசு வந்த மூன்று வருடத்தில் எந்த ஓரூ திட்டத்தையும் கொண்டு வர வில்லை, அதிமுகவில் இருப்பதே நமக்கு பெருமை.பொன்விழா கண்ட கட்சி அதிமுக. தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக, குறிப்பாக 1652 கோடி ரூபாய் மதிப்பில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றி கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தின் உரிமையான காவிரி நீரை பெற்று தந்தது அதிமுக தான். காவேரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது, அதிமுக ஆட்சியில் தான் இலங்கை தமிழர்,கச்சத்தீவு பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டது நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று உள்ளோம்.

2026 ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவது உறுதி.. அதிமுக ஒன்றும் சாதாரண கட்சி இல்லை. ஒரு தோல்விக்கு பின்னால் மிகப்பெரிய வெற்றியை பெரும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே .பென்னாகரம் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு 200 தொகுதிக்கு மேல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதிமுக. 2026 ல் அதிமுக ஆட்சி அமையும்.. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொடுத்தது.. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு உள்ளிட்டவைகளை உயர்த்தி மக்களை வஞ்சித்து வருகிறது திமுக. திமுகவிற்கு மக்கள் யாரும் ஓட்டு போட தயாராக இல்லை..அரசு ஊழியர்களும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர்.மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக அரசு செய்யாத திட்டங்களை செய்வோம் என்றும் பேசினார்.தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில்ஈரோடு மாவட்டம் என்பது அதிமுகவின் எக்கு கோட்டை..மீண்டும் வருகிற 2026 ல் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும் .கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார்.அதிமுகவினரை வெல்வதற்கு எவராலும் முடியாது.திமுகவினர் நினைப்பது ஒரு போதும் தமிழகத்தில் இனி நடக்காது.