ஸ்ரீ குழந்தையானந்தர் குருபூஜை.


அவனாசி ஒன்றியம் புதுப்பாளையம் கிராமம் நாதம்பாளையம் பிரிவு அருகே ஸ்ரீ குழந்தையானந்தர் குருபூஜை விழா நடந்தது. காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. குழந்தை ஆனந்தயானந்த சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும், 16 வகை திரவியங்கள் அபிஷேகமும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
