கோபிசெட்டிபாளையத்தில் ஒரு லிட்டர் கழுதை பால் 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை,
மலை பகுதியில் சேகரிக்கப்படும் விறகு, அருகில் உள்ள கிராமங்களில் விற்பனைக்காக கொண்டு செல்லவும், மலை பிரதேசங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லவும் வெகுவாக பயன்பட்டது கழுதை மட்டுமே.


இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சீராளன், சின்னதுரை குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பல ஆண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊர் ஊராக சென்று கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர்.ஒரு கழுதையிடம் இருந்து அதிகபட்சமாக 500 மில்லி லிட்டர் வரை பால் கிடைக்கும் என்ற நிலையில் அதன் குட்டிகளுக்கு பாதியை கொடுத்து விடும் இவர்கள் மீதமுள்ள பாலை வீதி வீதியாக சென்று கழுதை பாலில் உள்ள சத்துக்கள் குறித்து, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக கூறி 50 மில்லி 200 வரை விற்பனை செய்து வருகின்றனர்.



கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியில் உள்ள வாரச்சந்தையில் தங்கி உள்ள இவர்கள் காலை முதலே கழுதை பால் விற்பனைக்காக கிளம்பி விடுகின்றனர்.கோபி நகர் பகுதி மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் இவர்கள், கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், காமாலை, சளி, மூச்சுத்திணறல், உள்ளிட்ட நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படாது என்றும் நன்கு ஜீரணம் ஆகும் என்று கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.பெரம்பலூரில் இருந்து 12 கழுதைகளுடன் கிளம்பிய இவர்கள் கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு,சேலம் என பல்வேறு மாவட்டங்களில் கழுதை பால் விற்பனை செய்து விட்டு 6 மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் திரும்புகின்றனர், இதை கிராம மக்கள் ஆர்வமுடன் கழுதை பால் வாங்கி செல்கின்றனர்.