திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் கோபால் மகன் அங்கப்பன்(36).இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அங்கப்பன் அவரது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு வந்துள்ளார்.அணையின் கீழ் பகுதியில் பவானி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.அப்போது பவானி ஆற்றில் துணி துவைத்துக்கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த ரோகிணி என்பவர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அங்கப்பனை மீட்டு பங்களாபுதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட அங்கப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்ஒரே நாளில் கொடிவேரி அணை பகுதியில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.