நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Demonstration on behalf of Nambiur District Employees Union

நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கலை தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தலைவர் ரகு,வட்டச் செயலாளர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள். ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும்.

ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும்,21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்டசரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்,அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், கருணை அடிப்படையிலான பணியிடங்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு எற்கனவே வழங்கப்பட்ட வந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.

சத்துணவு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மறைவிற்கு பின் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுக்கு பணி வழங்க மறுக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப்பளுவினை குறைக்க வேண்டும்.

அலுவலக பணி நேரத்திற்கு பின்பும் அரசு விடுமுறை நாட்களிலும்| நடத்தப்பட்டு வரும் ஆய்வுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் மேகலா நன்றி கூறினார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்