எ

இந்த நிலையில் இன்று பணிக்கு செல்வதற்காக புதுக்கொத்துக்காடு பகுதியில் உள்ள தங்களது வீட்டிலிருந்து இருந்து 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் – ஈரோடு சாலையில் கோபி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

போடிசின்னபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளி, முன் சென்ற பிக்கப் வேண் ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளார்.


அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்தில் நேருக்கு நேர் மோதி மூவரும் சாலையில் தூக்கி வீசப்படுள்ளனர். இதில் கார்த்திக் என்பவருக்கு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கிய மேலும் இரண்டு பேரையும் மீட்டு கோபியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

எ