நம்பியூர் அருகே காட்டாற்று வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம் சீர் செய்யப்பட்டது.

A temporary footbridge was repaired near Nambiur that was swept away by the wild floods

நம்பியூர் அருகே காட்டாற்று வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம் சீர் செய்யப்பட்டது

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் – புளியம்பட்டி சாலையில் கொட்டக்காட்டு பாளையம் என்ற இடத்தில் தரை மட்ட பாலத்தை அகற்றி விட்டு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புளியம்பட்டி அருகே உள்ள மங்கரசு வளையபாளையம், செம்மம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முன்தினம் மாலை திடீரென கன மழை பெய்தது.

சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் மழை நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீர் ஓடையில் இருந்து அதிகளவு தண்ணீர் கொட்டக்காட்டுபாளையம் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் உள்ள ஓடை வழியாக வெளியேறும் போது, அங்கு அமைக்கப்பட்ட பாலம் கட்டுமான பணிகளை முழுமையாக சேதப்படுத்தியதோடு கட்டுமான பொருட்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் நம்பியூரில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வேறு வழியாக வாகனங்கள் மாற்றிவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளத்தில் நீர் வரத்து குறைந்தது தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது
தொடர்ந்து தற்காலிக பாலம் சீரமைக்கும் பணிகள் முற்றிலும் முடிவடைந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது
காட்டாற்று வெள்ளத்தினால் சேதமடைந்து தற்காலிக பாலம் சீர் செய்யப்பட்டு நம்பியூர்- புளியம்பட்டி சாலையில் வாகனங்களை இயக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment