கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, தொடர்ந்து மாலையில் கரட்டடிபாளையம், நல்லகவுண்டம்பாளையம் கலிங்கியம், நாகர்பாளையம், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், கோபி பேருந்து நிலையம் குள்ளம்பாளையம் டி.என் பாளையம், நஞ்சகவுண்டன்பாளையம் மொடிச்சூர் வேட்டைக்காரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது,


இந்த மழையின் காரணமாக குளிர்ந்த சூழல் நிலவி வருவதுடன், கன மழை பெய்த பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது, கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.