கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் கோடைவிடுமுறையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயனிகள் அருவிபோல கொட்டும் நீர்ல் உற்சாக குளியளிட்டும் தங்கள் குடும்பங்களுடன் மகிழந்தனர்.


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் ஈரோடு மாவட்டம் மன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.


இந்த நிலையில் கோடை விடுமுறை என்பதால் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை சேலம் திருப்பூர் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயனிகள் காலை முதலே வர தொடங்கினர் ,மேலும் அணையில் கொட்டும் நீரில் தங்கள் குடும்பத்துடன் உற்சாக குளியலிட்டும்,கடற்கறை போல அமைந்துள்ள மணலில் அமர்ந்து அங்கு விற்க்கபடும் பொறித்த மீன்களை வாங்கி உண்டு மகிழ்ந்தும்,பரிசல் பயனம் மேற்கொண்டும் வருகின்றனர்,

மேலும் கொடிவேரி அணையில் சுற்றுலா பயனிகள் குளித்து வரும் நிலையில் ஆழமான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் சுற்றுலா பயனிகள் பாதுகாப்பாக அணையில் குளிக்கவும் ஒலிப்பெருக்கி மூலம் கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.