கோபிசெட்டிபாளையம் புதுப்பாளையம் பஜனைகோவில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் திடீர் தீ விபத்து. தக்க சமயத்தில் தீயணைப்பு துறையினர் சம்வப இடத்திற்கு சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் புதுப்பாளையம் பஜனை கோவில் அருகே திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது, இந்த தோட்டம் அருகில் வீடுகள் உள்ளன, இந்த தோட்டத்தில் காய்ந்த ஓலைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

தோட்டத்திலிருந்து புகை வருவதை கண்டு அருகில் குடியிருப்பவர்கள் கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோபி தீயணைப்புத் துறையினர் விவசாய தோட்டத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் பரவாமல் அணைத்தனர்,
இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது,மேலும் தீபத்து குறித்து கோபி தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.