கோபி அருகே உள்ள பச்சமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது

அகஸ்தியரால் பாடல் பெற்ற தளங்களுல் ஒன்றாக விளங்கி வரும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்தர திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.

இந்த ஆண்டும் கடந்த 18ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கிய திருவிழா 19 ம் தேதி காலை கொடியேற்றமும் அதைத்தொடர்ந்து மாலை யாக சாலை பூஜை என கோலாகலமாக தொடங்கியது

அதைத்தொடர்ந்து மாலை பூத வாகனத்தில் சாமி தேர் வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும், பின்னர் அபிஷேகமும் தீபாரதனையை தொடர்ந்து தங்கமயில் மற்றும் தங்க ரதம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது

20ம் தேதி யாக சாலை பூஜையை தொடர்ந்து யானை வாகனத்தில் சாமி தேர் வீதி வலம் வருதலை தொடர்ந்து அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
21ம் தேதி யாக சாலை பூஜயை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சாமி தேர்வீதி உலா வருதலும், 22ம் தேதி அன்ன வாகனத்தில் சாமி தேர்வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து 23ம் தேதி யாக சாலை பூஜையை தொடர்ந்து ஆட்டு கிடாய் வாகனத்தில் சாமி தேர்வீதி வலம் வருதலும் பின்னர் சாமி திருத்தேருக்கு எழுந்தருளுதலை தொடர்ந்து சண்முக கடவுளுக்கு வெள்ளை சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.அதைத்தொடர்ந்து யாக சாலை பூஜையும்,சண்முக கடவுளுக்கு சிகப்பு சாற்றி உற்சவமும் அதைத்தொடர்ந்து சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து 26ம் தேதி காலை மகன்யாச அபிஷேகமும், திருப்படி பூஜையும், பின்னர் சண்முகருக்கு பச்சை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதைத்தொடர்ந்து, பால் மற்றும் காவடி அபிஷேகத்தை தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோபி மொடச்சூர், புதுப்பாளையம், மேட்டுவலுவு, நாய்க்கன்காடு, கரட்டூர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.அதைத்தொடர்ந்து பக்தர்கள் பறவை காவடியில் அலகு குத்தி கோயில் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.புதுப்பாளையத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடியில் ஊர்வலமாக சென்றனர். புதுப்பாளையத்தில் தொடங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம், மொடச்சூர் சாலை, பச்சமலை சாலை , சீதாலட்சுமி புரம் வழியாக பச்சமலைக்கு சென்றது.இதில் முதுகில் குத்தப்பட்ட கத்தியுடனும், முதுகில் அலகு குத்திய நிலையில் ராட்சத கிரேனில் ஏற்றப்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்ற போது பல்வேறு இடங்களில் சுமார் 50 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றியது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது..அதே போன்று 10 அடி முதல் 20 அடி நீளம் வரை வாயில் அலகு குத்தியும், முதுகில் பட்டா கத்தியால் அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.அலகு குத்தி பறவை காவடியில் ஊர்வலமாக செல்வதை காண்பதற்காக புதுப்பாளையத்தில் இருந்து பச்சமலை வரை ஏராளமானோர் சாலையோரமாக நின்று பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர்.முருக பக்தர்களின் பறவை காவடி ஊர்வலம் காரணமாக ஈரோடு சத்தி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.