
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக பெருந்துறையைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்,

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருணாச்சலம் இன்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அவரது இல்லத்தில் தொண்டர்களுடன் சந்தித்தார்

அதனைத் தொடர்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருணாச்சலத்திற்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் சால்வை அணிவித்து தொண்டர்களிடையே அறிமுகப்படுத்தி வைத்தார்,பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன்,முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் அதிமுக 1977 லிருந்து 8 முறை ஆட்சியில் இருந்து சிறந்த ஆட்சியை தமிழகத்தில் தந்துள்ளது, தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறோம்,கோபி தொகுதியை பொறுத்தவரை பல்வேறு தேர்தலில் கோட்டையாக திகழ்ந்துள்ளது,இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத அளவிற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எந்த தியாகத்தையும் செய்கின்ற அளவிற்கு ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது அதிமுக தான்,திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வரலாறு படைக்கின்ற அளவிற்கு வெற்றி வாகை சூடும், அதிமுகவை சார்ந்தவர்கள் பொதுமக்கள் அனைவரும் அதிமுக வெற்றி பெறுவதற்காக உறுதுணையாக இருக்கவேண்டும்,திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி என்பது தமிழகத்தில் மாபெரும் வெற்றி ஈட்டி தருகிற நாடாளுமன்ற தொகுதியாக உருவாக்குவதற்கு அனைவரும் அயராது உழைக்கவேண்டும்,இதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற அனைத்து கழகத்தின் முன்னோடி பொறுப்பாளர்கள், இயக்கத்திற்கு அரணாக இருந்து வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணங்களை மேற்கொள்வோம்அதிமுக கூட்டணி கட்சியை சாார்ந்ாவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம் என்றார்.