நம்பியூர் அருகே உள்ள நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் வயது 65 இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலி வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று (65) வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் எல்.பி.பி வாய்க்காலில் மிதப்பதாக நம்பியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது.அதன் அடிப்படையில் நம்பியூர் தீயணைப்பு துறையினர் சென்று பிரேதத்தை மீட்டனர்.மேற்கொண்டு விசாரணை செய்ததில் இறந்தவர் பெயர் ரங்கன் மகன் செல்வம் என்றும்இவர் நம்பியூர் நாச்சிபாளையம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும்இவர் தனியார் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார் எனவும் கூறினர். இவருக்கு மணியாள் என்ற மனைவியும் . மகள்கள் கவிதா, ரேவதி, சுகன்யா ஆகியோர் உள்ளனர் எதற்காக எல்.பி.பி வாய்க்காலில் குறித்து தற்கொலை செய்து கொண்டார் என நம்பியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது..