


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பங்களா புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1924 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்,இந்த பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,
இந்த நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் மாணவர்கள், சார்பில் பள்ளிக்கு தேவையான விளையாட்டு சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், எல் இ டி டிவி, இருக்கைகளை, போர்வெல் அமைத்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மாணவர்கள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீர்வரிசயாக வழங்கினார்கள்.
நூற்றாண்டு விழாவையொட்டி கல்வி சீர்வரிசைகள் ஊர்வலமாக மேள தாளங்கலுடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது,
ஊர்வலமாக கல்வி சீர்வரிசைகளை கொண்டுவந்த மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
மேலும் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளியில் மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் அறிவியல் கண்காட்சியினை மாணவர்கள் செய்திருந்தனர்.
மேலும் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நூற்றாண்டு விழா கள்வெட்டினை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் நூற்றாண்டு துவக்க விழா ஜோதியினை ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.