ஆட்சியில், கூட்டணியில் கலகமூட்ட பார்க்கிறார்கள் இது மணல் கோட்டை இல்லை.இந்த ஆட்சி ஒரு இரும்புக்கோட்டை என கோபிசெட்டிபாளையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேச்சு.


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் சாமி கைவல்யம் தொண்டரறச்சிறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசியதாவது.


இந்த ஆட்சியில் எப்படி கலகமூட்டுவது, கூட்டணிக்குள் எப்படி நுழைந்து பார்ப்பது என்றெல்லாம் சிலர் சித்து வேலைகளை செய்து பார்க்கறார்கள்.
அவர்களுக்கு சொல்லுகிறோம் இது ஒன்றும் சாதாரண மணல் மேடு இல்லை, இது ஒரு இரும்புக் கோட்டை.அன்றைக்கு இருந்த எதிரிகள் நாணயமிக்க எதிரிகள். இன்று இருக்கும் எதிரிகள் நாணயமே தெரியாத சூழ்ச்சி மிக்க, தந்தரமிக்க ஆரியத்தின் புதிய வடிவமான எதிரிகள் என்றார்.முன்னதாக சாமி கைவல்யம் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை திராவிடர் கழகத்தின் தலைவராக கி.வீரமணி வெளியிட்டார். விழாவுக்கான ஏற்பாடுகளை வக்கீல் சென்னியப்பன் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் செய்திருந்தனர்.