தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் படியும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களது வழிகாட்டுதல் படியும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் அவர்களது தலைமையில் உள்ள நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவர்களிடையே செரிவூட்டப்பட்ட உணவு தொடர்பான விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் உணவுப்பொருட்கள் இடையே செறிவூட்டப்பட்ட உணவு குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் நம்பியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீதேவிப்ரியாகலந்து கொண்டனர்.