
கோபிசெட்டிபாளையம்
இந்து முன்னனி இயக்கத்தின் மாநிலச் செயலாளரின் கைது நடவடிக்கையை கண்டித்து கோபியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள குங்கும காளியம்மன் கோவிலில் அனுமதியின்றி வழிபாடு நடத்த முயன்ற இந்து முன்னனியின் மாநிலச்செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இந்து முன்னனியை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திட முயன்றனர்.
இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னனி இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களை கோபி காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.