ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் பெரியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதுஇதில் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பெரியார் சிலைக்கு நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவருமான மெடிக்கல் செந்தில்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் நம்பியூர் ஒன்றிய திமுக கட்சி நிர்வாகிகள் தலைமைபொதுக்குழு உறுப்பினர் கீதாமுரளி, சிறுபான்மை அணி நலப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் அல்லா பிச்சை, நம்பியர்பேரூராட்சி எட்டாவது வார்டு செயலாளர் ஆனந்தகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரைஸ் மில் சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை தலைவர் முருகசாமி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கவின்குமார், தர்மா சங்கர் , உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்