ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நம்பியூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தமைக்கு நம்பியூர் ஒன்றிய செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் உறுப்பினர் கீதா முரளி, மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணைத் தலைவர் பா.அல்லா பிச்சை, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ஜே.வி. முருகசாமி, 8 வார்டு செயலாளர் ஆனந்தகுமார், சங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் ,மாவட்ட , பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி தோழர்கள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.