தமிழ்நாடு துணை முதலமைச்சர் ,கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48- வது பிறந்தநாளை முன்னிட்டு நம்பியூர் ஒன்றிய தி.மு.கழக செயலாளரும் நம்பியூர் பேரூராட்சி தலைவருமான மெடிக்கல்.ப.செந்தில்குமார் தலைமையில்,மாவட்ட பிரதிநிதி பி.வி.இளங்கோ முன்னிலையில்,
வடக்குமாவட்ட கழகச் செயலாளர் என்.நல்லசிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நம்பியூர் ஒன்றியம், கோசணம் ஊராட்சி திட்டமலை அரசு கலைக் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.15 இலட்சம் மதிப்பிலான கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.


தொடர்ந்துஅருள்மிகு திட்டமலை முருகன் திருக்கோயில் பழுதடைந்த தேரை பார்வையிட்டு தேர் சீர் செய்து சிறப்பாக திருவிழா கொண்டாட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும் பொத்தபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் , அனைத்து மாணவ, மாணவியருக்கும் மரக்கன்றுகள், இனிப்புகள் மற்றும்பொத்தபாளையம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு 20 – நாற்காலிகள் , விளையாட்டு உபகரணங்கள் வழங்கியும் சிறப்பித்தார்.
பொத்தபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைக்க பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெசவாளர் அணி மாவட்டத் தலைவர் என்.சி.சண்முகம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் வேலுச்சாமி . சிறுபான்மை அணி மாவட்ட துணைத் தலைவர் பா. அல்லாபிச்சை, வர்த்தகஅணி மாவட்ட துணை அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் , கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்டதுணை அமைப்பாளர் ஜே.வி.முருகசாமி, இளைஞர் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மூணாம்பள்ளி எம். எம்.வெங்கடேஷ், கோசனம் உமா சங்கர், ராஜ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் .