நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேமண்டம்பாளையம், குளத்துப்பாளையம், மலையபாளையம், எலத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.


இதில் வேமாண்டம் பாளையம், குளத்துபாளையம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது
காலை முதலே கடுமையான வெப்பம் நிலவியது மாலை சுமார் 4 மணியளவில் கரு மேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது இதில் நம்பியூர் அருகே உள்ள தண்டலூர் மாரியம்மன் கோவில் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்து மின் மின்னணு சாதனங்கள் டிவி பிரிட்ஜ் உள்ளிட்டவைகள் சேதம் ஏற்பட்டது மேலும் வீட்டினுள் டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது அவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர்.

மேலும் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் முடிந்து விழுந்தன இதில் வேமாண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள மரமும் வேமாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்புள்ள மரமும் சார்ந்துள்ளது.
அஞ்சானூர் கிராமம் புதுப்பாளையத்தில்
அருணாசலம் – 75 என்பவரது மாட்டு கன்றின் (5 மாதமான) மீது மரம் சாய்ந்து கன்றுக்குட்டி இறந்து போயிள்ளது.
வேமாண்டம்பாளையம் உட்பட்ட குளத்துப்பாளையம் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறியது.

நம்பியூர் அருகே உள்ள தண்டலூர் மாரியம்மன் கோவில் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்ததை படத்தில் காணலாம் வீட்டின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.