கோபி நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம். விவேகானந்தா நீட் அகாடமி உடன் இணைந்து கோபி லைன்ஸ் கிளப் மற்றும் சத்தியமங்கலம் ரோட்டரி சக்தி டைகர்ஸ், அரசு பள்ளி மாணாக்கர்கள் 7.5% மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு பெற்றிட நீட் தேர்வுக்கான பயிற்சி பெற 1000 நபர்கள் முன்பதிவு செய்து ஐந்து பேட்ச் ஒவ்வொரு பேட்ச்கும் 200 மாணாக்கர்கள் சத்தியமங்கலம் – கோபிசெட்டிபாளையத்தில் நீட் ஸ்காலர்ஷிப் தேர்வுஎழுதினர்.


மாணாக்கர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பாக நீட் தேர்வு எழுதி நீட் தேர்வின் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
இந்த ஆண்டு 7.5% இட ஒதுக்கீட்டில் கோபி கல்வி மாவட்டத்தில் சார்ந்த 10 மாணாக்கர்களாவது மருத்துவ கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர்.டி.கே. கிருபாகரன் அவர்கள் சிறப்பு கருத்தரங்க வகுப்பு நடத்தப்பட்டது.
2024 நவம்பர் 17 முதல் வார இறுதி நாட்கள் (ஞாயிறு) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் துவங்கவுள்ளது.பயிற்சி வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் நடைபெறும். ஒவ்வொரு பாடத்திற்கான தனித்தனியாக மெட்டீரியல் வழங்கப்படும்.
வார, மாத, பாடவாரியான தேர்வுகள் நடத்தப்படும். மேலும் எதிர்வரும் 25.10.2024 வெள்ளை அன்று ஒரு நாள் சிறப்பு ஆன்லைன் வழிகாட்டி கூகிள் மீட்டிங் (இரவு 8.00 – 9.00) 1 மணி நேரம் நடைபெற உள்ளது.