
கோபி அருகே கரட்டடி பாளையத்தில் நால்ரோடு சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏபி முருகானந்தம் போட்டியிடுகிறார்
புதன்கிழமை இரவு 7 மணிக்கு கரட்டடிபாளையம் நால்ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான தன்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.