கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாகர்பாளையம் ரோட்டில் அதிக அளவில் குதிரைகள் சுற்றி திரிகின்றன இந்தக் குதிரைகள் அடிக்கடி வாகன ஓட்டிகளை தள்ளி விட்டு காயப்படுத்துவதாகவும் கூறுகிறார்கள் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது குதிரைவாகனத்தின் மீது ஏறி விபத்து ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முடியாது என்று கோவை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது .


இதேபோல் இரண்டு மாதத்திற்கு முன்பு இக்குதிரைகள் ஒரு மூதாட்டியை கடித்து விட்டதாக கூறப்படுகிறது இதுபோல் நிறைய பொதுமக்களை கடித்து வருவதாகவும் ரோட்டின் பக்கவாட்டின் குறுக்கே ஓடுவதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
கோபி அரசு மருத்துவமனையில் அதே பகுதியில் இருந்து குதிரை கடித்து ஊசி போட இங்கு அதிக பேர் வருகிறார்கள் என்று கூறுகிறார்கள் ஏற்கனவே நகர் பாளையம் ரோடு மிகவும் குறுகிய சாலை எதிரே நான்கு சக்கர வாகனம் வந்தால் கடந்து செல்வது சிரமமாகும் இந்த நிலையில் காலை மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகளை கூட்டிவிட்டு ஆட்டோக்கள் வேண் இருசக்கர வாகனம் என பல்வேறு வாகனங்களில் குழந்தைகளை கூட்டி செல்கிறார்கள் இந்த நேரத்தில் இதில் 9 மேற்பட்ட குதிரைகள் அங்கே சுற்றி திரிந்து வாகனத்துக்கு இடையூறாக ரோட்டில் நின்று மக்கள் வண்டி மேல் குதித்து மக்களை கடித்து பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருந்து வருகிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள் .
இக்குதிரை பல மாதமாக இங்கு சுற்றுகிறது உரிமையாளர் யார் என்று தெரியவில்லை இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் குதிரை கடிப்பதால் தொற்றுக்கள் பரவி உடலில் பாதிக்க வாய்ப்பு உள்ளது மற்றும் பெரியவிபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதற்கு உடனடியாக நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக பலமுறை கூறியும் யாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை அரசாங்கம் தலையிட்டு இதற்கு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் இக்குதிரைகள் மதம் பிடித்த யானை போல் எப்பொழுது கூட்டம் கூட்டமாக திடீரென்று ஓடுகிறது வண்டி மேல் குதிக்கிறது எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ரோட்டில் குதிரை நிற்கும் பொழுது அதை கடந்து செல்ல மக்கள் பயப்படுகிறார்கள் உடனடியாக இக்குதிரைகளைஅப்புறப்படுத்துமாறுஅங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.