தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை உள்ளிட்டற்றை கண்டித்து கோபிஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

A human chain protest on behalf of Gopi ADMK to condemn the law and order disorder, price hike, electricity tariff hike etc. in Tamil Nadu.

விளம்பரத்தை வைத்துக்கொண்டு நடைபெறுகின்ற ஆட்சியாக திமுக உள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மக்கள் பாராட்டுகின்ற அளவிற்கு சீரும் சிறப்புமாக இருந்தது, தற்போது பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதை திமுக அரசால் தடுக்க இயலவில்லை என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ,செங்கோட்டையன் பேட்டி.

InShot 20241009 045658045
InShot 20241009 045729773

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை உள்ளிட்டற்றை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நகராட்சி, பேரூராட்சிகளில் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

InShot 20241009 045914417
InShot 20241009 045945066

இதனையொட்டி இன்று தமிழகத்தில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்,அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது, இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கோபி சீதா கல்யாண மண்டபத்திலிருந்து கச்சேரி மேடு பகுதி வரை அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

InShot 20241009 050014188

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்.அதிமுக மக்களுக்காக செயல்படக்கூடிய இயக்கம், மக்களை நேசிக்கின்ற இயக்கம், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மக்கள் பாராட்டுகின்ற அளவிற்கு சீரும் சிறப்புமாக இருந்தது, அதனை மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர்.அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி பால் விலை, உள்ளிட்டவை மக்கள் மனநிலைக்கு ஏற்ப குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டதுதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, வீட்டு வரி மின் கட்டணம் பால் விலை, குப்பைவரி உள்ளிட்டவை உயர்ந்துள்ளன.

குப்பைக்கு எல்லாம் வரி போடுகின்ற ஆட்சியாக திமுக உள்ளது.தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பாலியல் தொல்லை, பள்ளி கல்லூரிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதை திமுக அரசால் தடுக்க இயலவில்லை.

விளம்பரத்தை வைத்துக்கொண்டு நடைபெறுகின்ற ஆட்சியாக திமுக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் ஆட்சியில் அமர போகும் அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை மக்கள் தீர்ப்பளிக்கப் போகிறார்கள் என்றார்.

இதில் முன்னாள் எம்பி சத்தியபாமா, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், குறிஞ்சி நாதன், சிபி கார்த்திக், கந்தவேல் முருகன், பாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்