கோபி அருகே உள்ள கூடக்கரையில் கோபி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூட நம்பிக்கை ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51ஏ(ஹெச்) பிரிவு விளக்க பரப்புரை கூட்டம் மற்றும் சின்னாரிபாளையத்தில் புதிய கிளை திறப்பு விழா,கொடியேற்று விழா நடைபெற்றது.


கூடக்கரை சந்தைத்திடல் அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு திராவிடர் கழக நம்பியூர் ஒன்றிய செயலாளர் பிரசாந்த்குமார் தலைமை தாங்கினார். நம்பியூர் ஒன்றிய தி.க துணைச்செயலாளர் கார்த்தி வரவேற்றார். திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் சிவலிங்கம், தி.க. மாவட்ட துணைத்தலைவர்கள் சதுமுகை பழனிச்சாமி, பொன்.முகிலன், தி.க.மாவட்ட துணைச்செயலாளர்கள் மூர்த்தி, அரங்கசாமி நம்பியூர் ஒன்றிய தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக சின்னாரிபாளையத்தில் திராவிடர் கழகத்தின் புதிய கிளையை திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் அதிரடி க.அன்பழகன் திறந்து வைத்தார்.திராவிடர் கழக கோபி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.சென்னியப்பன் கொடியேற்றி வைத்தார். கோபி மாவட்ட செயலாளர் குணசேகரன் புதிய கிளையின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து கூடக்கரையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மூட நம்பிக்கை ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51ஏ(ஹெச்) பிரிவு விளக்க பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் அதிரடி க.அன்பழகன், கோபி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.சென்னியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அதிரடி க.அன்பழகன் பேசும் போது, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியமும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு திருக்குறளும் எழுதப்பட்ட காலத்தில் எழுதப்படிக்க தெரிந்த தமிழர்களுக்கு இடையில் ஊடுருவிய சிலரின் சதியால் தமிழர்கள் எழுதப்படிக்க கூட தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், பெரியாரின் கடுமையான முயற்சியினாலும், அப்போதைய முதலமைச்சர் காமராஜர் போன்றோரின் தீவிர நடவடிக்கையினாலும் இன்று கிராமத்தில் உள்ள மாணவர்கள் கூட உயர் பதவிக்கு வந்துள்ளனர். சுதந்திரத்தின் போது ஒரு சதவீதம் கூட கல்வி அறிவு இல்லாத நிலையில் இன்று காமராஜர், கலைஞர் போன்றோரின் தீவிர முயற்சியினால் அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற நிலை உருவாகி உள்ளது.
பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பெரியாரின் தொடர் போராட்டத்தினால் இன்று சர்வதேச அளவில் அனைத்து துறைகளிலும் தமிழ் பெண்கள் உயர்ந்த நிலையில் உள்ளதாக பேசினார்.
கூட்டத்தில், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் அஜித குமார், மாவட்ட மாணவரணி தலைவர் சூர்யா,நம்பியூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், நம்பியூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார், நம்பியூர் ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் சுரேஷ்,ஒன்றிய மாணவரணி தலைவர் தனபால், தி.க.பொதுக்குழு உறுப்பினர் பாட்டுசாமி, ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன்(ப.சாகர்), கோவிந்தன்(அந்தியூர்), நாகராஜ்(சத்தி),மாவட்ட மகளிர் பாசறை தலைவர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.