T.N.பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமுகை ஊராட்சி, சைபன் புதூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளுக்கும் பேருந்து வசதி துவங்கப்பட்டதைத் தொடர்ந்து வீட்டுவசதி, மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணாக்கர்கள் அவருக்கு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
மேலும் பள்ளி மாணாக்கர்களுக்கான உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உடன் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் AG_வெங்கடாச்சலம் அவர்கள் மற்றும் T.N.பாளையம் ஒன்றிய கழக செயளாலர் எம்.சிவபாலன் அவர்கள், ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனிசாமி ஆகியோருடன் ஒன்றிய நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் நிர்வாகிகள்,வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலர் கலந்து கொண்டனர்.
T.N.பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமுகை ஊராட்சி, சைபன் புதூரில் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார் வீட்டுவசதி, மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam