வரப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளளஅத்திகடவு அவினாசி திட்டத்தின் 5 வது நீரேற்று நிலையம்


ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 3 – தலைமுறைகளை கடந்த 65 ஆண்டு கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை மாண்புமிகு. தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin அவர்கள் காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தை துவங்கி வைத்தார்.



ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், எம்மாம்பூண்டி ஊராட்சி, வரப்பாளையம் 5 – வது நீரேற்று நிலையத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.சுப்பராயன் அவர்கள், நம்பியூர் ஒன்றிய தி.மு.க செயலாளர், நம்பியூர் பேரூராட்சி தலைவர் திரு.மெடிக்கல்.செந்தில்குமார் அவர்கள்,தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ். சென்னிமலை அவர்கள்கே.கே.செல்வம், மாவட்ட அமைப்பாளர் விவசாய அணி டிசி மணி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன் அவர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திருமதி.சரஸ்வதி பழனிச்சாமி அவர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட கழக செயலாளர் சிவராஜ் அவர்கள் , திராவிடர் கழக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.சென்னியப்பன் அவர்கள், ஈரோடு வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சண்முகம், சிறுபான்மைபிரிவு துணைத்தலைவர் அல்லாபிச்சை, இந்திரா மெடிக்கல் துரைசாமி, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி
இளங்கோ,
நம்பியிர் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் நாகேஸ்வரி ஆகியோர் நீரேற்று நிலையத்திற்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.


அத்திக்கடவு – அவிநாசி திட்டம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக இருந்து வந்தது. இத்திட்டம் ரூ.1916.41 கோடி செலவில், பணிகள் நிறைவுற்று துவங்கப்படுகிறது.


இத்திட்டத்தின் கீழ் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1,045 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள லட்ச கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர்.
3 தலைமுறைகளின் கனவுத்திட்டம், இன்று நனவானது.


நிகழ்ச்சியில் அவிநாசி அத்திக்கடவு திட்ட ஐந்தாவது நீர் ஏற்ற நிலையத்திற்கு சுமார் 2.5 ஏக்கர் நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்வின் போது கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.