கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேசை நாற்காலிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.


கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டத்திற்க்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேசை நாற்காலிகளை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி வருகிறார்.


அந்த வகையில் இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மணியகாரன்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாங்கோவில், உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேசை நாற்காலிகளை முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.


தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பேனாக்களை வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்புரை ஆற்றினர்.