சத்தியமங்கலம் அருகே வடவள்ளி ராம்பயலூரில் புல்லட் பைக்கில் கள்ளச்சாராயம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

3 people were arrested and jailed for smuggling liquor on a bullet bike in Vadavalli Rampayalur near Sathyamangalam.

சத்தியமங்கலம் அருகே உள்ள வடவள்ளி பகுதியில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கோபி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையில் மதுவிலக்கு போலீசார் வடவள்ளி அருகே உள்ள ராம்பயலூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த புல்லட் பைக் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, பைக்கில் இரண்டு பாட்டில்களில் 2 லிட்டர் கள்ளச்சாராயம் இருப்பது தெரிய வந்தது.அதைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் கடத்திய சத்தியமங்கலம் கோமாளி தோட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(45), சிக்கரசம் பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்(40), வடவள்ளியை சேர்ந்த ஜான்பீட்டர்(32) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட புல்லட் பைக்கை பறிமுதல் செய்தனர்.அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரும் கோபி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment