கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேசை நாற்காலிகளை முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் வழங்கினார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருமந்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கரட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாணவ மாணவிகளுக்கான மேசை நாற்காலிகளை வழங்கினார்.


தொடர்ந்து கரட்டுப்பாளையம் பள்ளி மாணவிகள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்பு நடனமாடி அசத்தினர், நடனமாடி அசத்திய மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரிசுகளை வழங்கினார்.


பின்னர் கரட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவிகள் சுபிக்ஷா ஹர்ஷிகா வைஷ்ணவி ஆகிய மூன்று மாணவிகள் மாவட்ட யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றுள்ளனர் மேலும் வைஷ்ணவி என்ற மாணவி மாநில போட்டியில் முதல் பரிசு பெற்றார்


சுபிக்ஷா என்ற மாணவி கராத்தே மாவட்ட மாநில அளவில் நடைபெற்ற பஞ்சாயத்து யுவகிரீடா ககேல் அபியான் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார், இவர் பெங்களூருவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.


இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை பெற்ற மாணவிகளை முன்னாள் அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் பாராட்டுகளை தெரிவித்தார்.