கோபிசெட்டிபாளையம் அருகேஉள்ள கொடிவேரி அணை வழியாக நேற்று பெய்த கனமழை காரணமாக அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருவதால் இன்று கொடிவேரி அணைக்கு வர சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் நீர் அருவி போல கொட்டுவதால் ஈரோடு மாவட்டம் மட்டுமன்றி சேலம் நாமக்கல் திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணைக்கு வருவது வழக்கம்.


இந்த நிலையில் நேற்று கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் கனமழை பெய்தது,
இந்த கனமழை காரணமாக கொடிவேரி அணை வழியாக 1020 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது
இதனால் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயனிகள் பாதுகாப்பு நலன் கருதி கொடிவேரி அணை இன்று மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கவோ,மீன்கள் பிடிக்கவோ,பரிசல் பயனம் மேற்கொள்ளவோ,பொதுபணிதுறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.