கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் அரசு பள்ளியில் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கதொகையும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

கோபி அருகே டி.என்.பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட டி.என்.பாளையம், வாணிப்புத்தூர், பெரியகொடிவேரி, காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் மற்ற வேட்பாளர்களை விட 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்.
அதைத்தொடர்ந்து தேர்தலில் வெற்றிக்காக உழைத்த வாக்கு சாவடி முகவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி டி.என்.பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன் தலைமையில் ஈரோடு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, வடக்கெ மாவட்ட பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம்,அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் சச்சிதானந்தம், மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரா.தமிழ்மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. சுப்பராயனுக்கு பாராட்டி கேடயம் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
அதே போன்று அதிக வாக்குகள் பெற உறுதுணையாக இருந்த ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் மற்றும் பேரூர் கழக செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் பரிசு வழங்கி பாராட்டினார்.
அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் ஒன்றியத்தில் உள்ள 900க்கும் மேற்பட்ட வாக்கு சாவடி முகவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சிவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., டி.கே.சுப்பிரமணியம், மாணவராணி மாவட்ட அமைப்பாளர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்