ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எலத்தூர் உள் வட்டத்திற்கான ஜமாபந்தி முகாம் நடைபெற்றது .
ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் அதிகாரி ஆர்.எஸ்.ராம்குமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்
எலத்தூர் வட்டாரத்தில் உள்ள எலத்தூர் , சுண்டக்காம்பாளையம் , கூடக்கரை,ஆண்டிபாளையம்
உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விண்ணப்ப மனுக்களை வழங்கினர்.
முகாமிற்கு நம்பியூர் வட்டாட்சியர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
ஈரோடு மாவட்ட வழங்கல் அதிகாரி ராம்குமார் நேரில் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இம்முகாமில் புதிய ரேஷன் அட்டை ,பட்டா மாறுதல், நில அளவை, இறப்புச் சான்று, வாரிசு சான்று,முதியோர் ஓய்வூதியம், தொடர்பாகவும் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்திருந்தனர்.
முகாமில் நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாமில் பவானிசாகர் பகுதியில் யானை மிதித்து இறந்து போன நபர் ஒருவரின் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் வழங்கினார்.
நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி இரண்டவது நாள் முகாம்

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam