நெல்லை சிபிஎம் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்க முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி கட்சி அலுவலக வளாகத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் திருமணம் செய்து வைத்துள்ளனர்

இதில் பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்படட்டு கட்சியின் அலுவலகம், கண்ணாடி, இருக்கைகள், கதவு என அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்தும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இந்த ஆர்பாட்டத்தில் கலந்து 30 க்கும்; மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோசங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.