கரட்டடிபாளையத்தில் கோபி யூனியன் சேர்மனின் கார் மோதியதில் பைக்கில் சென்ற சப் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.
கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டி காந்திபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் விஸ்வநாதன் (49). இவர் கடத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை பணி முடிந்த பிறகு சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். கரட்டடிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கோபி யூனியன் சேர்மேன் மவுதீஸ்வரன்(அதிமுக) சென்று கொண்டிருந்த அரசு ஸ்கார்பியோ வாகனம், சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனின் பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து சேர்மேன் வாகன ஓட்டுநர் கோபி பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்த சாமூண்டீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த சப் இன்ஸ்பெக்டருக்கு
இவருக்கு கல்பனா(46) என்ற மனைவியும், கிருத்தீஸ் என்ற மகனும் ரித்திகா என்ற மகளும் உள்ளனர்.
கரட்டடிபாளையத்தில் கோபி யூனியன் சேர்மனின் கார் மோதியதில் பைக்கில் சென்ற சப் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam