கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

L near Kobe.Due to the loss in the industry in the school, the man who sought suicide by pouring soil into the body and defiled the body, died without treatment.

கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டி ஸ்ரீ நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது(48). டீ கடையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் முகமது ஹனீபா(25) கோபி பச்சைமலை சாலையில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் கடந்த சில மாதங்களாகவே நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மனவேதனை அடைந்த முகமது ஹனீபா கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்த போது மண்ணெண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்