ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் ஒவ்வொரு பருவமழை காலத்திலும் மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோபி, பவானி, சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி அந்தியூர் தலுகாவில் உள்ள அனைத்து நகரம், பேரூர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் மரங்களை வளர்க்க முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோபி, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, சத்தி, புளியம்பட்டி, தாளவாடி, நம்பியூர், டி.என்.பாளையம், பவனிசாகர் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளிடம் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி கவுந்தப்பாடியில் உளற ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் கைலாஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம்,அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை திமுக நிர்வாகிகளிடம் வழங்கினர்.


நிகழ்ச்சியில் பவானி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் துரைராஜ், ஒன்றிய துணைச்செயலாளர் சத்தியமூர்த்தி, பவானி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சேகர், கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகன், கோபி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கோபி நகர செயலாளர் மற்றும் நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ், சத்தி நகர செயலாளர் ஜானகி ராமசாமி, பவானி நகர செயலாளர் நாகராஜ், சலங்கபாளையம் பேரூர் கழக திமுக செயலாளர் பழனிச்சாமி, கூகலூர் பேரூர் கழக செயலாளர் ரஜாராம், வாணிப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் பழனிச்சாமி, ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வினோத்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.