அதிமுக ஆட்சியில் நிவாரணப் பணிகள் வேகமாகவும் விரைவாகவும் நடைபெற்றது,வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் வென்று காட்டுவோம் என்ற வரலாற்றை படைபோம் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பேச்சு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மேவாணியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்

இந்தியா வரலாற்றில் எம்ஜிஆர் ஆண்ட காலம் பொற்காலம் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது,திரைப்படத்திலும் அரசியலிலும், அவரை வெல்ல முடியாது என்ற வரலாற்றை படைத்தவர் எம்ஜிஆர்,எம்ஜிஆருக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவிற்கு வழிகாட்டியாக இருந்தார்,வளர்ந்து வருகின்ற கல்வி,வெளி உலக செய்திகள், விஞ்ஞானம் குறித்து அறிய மடிக்கணினி முக்கியமானதாக இருந்தது,கோடீஸ்வரர் கையில் இருந்த மடிக்கணினி குடிசையில் வாழுகின்ற மாணவர்களுக்கு வழங்கிய வரலாறு இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் நடைபெற்றது,ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை சீரோடும் சிறப்போடும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று வழிநடத்திச் சென்றார்,அதிமுக ஆட்சியில் நிவாரணப் பணிகள் வேகமாகவும் விரைவாகவும் நடைபெற்றதுமுன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற அதற்குப் பிறகு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் சீராக செய்யப்பட்டுள்ளது,வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் வென்று காட்டுவோம் என்ற வரலாற்றை படைபோம் என்றார்.