கோபி அருகே மொடச்சூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற கட்டிட தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுதிருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மஞ்சுளாஇவரது கணவர் 53 வயதான கருப்புசாமி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமி கோபி அருகே மொடச்சூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லைபல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில் அவரது மனைவி மஞ்சுளா அளித்த புகாரின் அடிப்படையில் கோபி போலீசார் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு வழக்கு பதிவு செய்து மாயமான கட்டிட தொழிலாளியை தேடி வருகின்றனர்.