தேசிய அளவில் உரைவாள் சண்டை போட்டியில் குமுதா பள்ளி மாணவி இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை

Kumuda school girl won two bronze medals in national level sword fighting competition

தேசிய அளவில் உரைவாள் சண்டை போட்டியில் குமுதா பள்ளி மாணவி இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை
தேசிய அளவிலான SQAY எனப்படும் உரைவால் சண்டை விளையாட்டு போட்டியானது ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட 55 மாணவர்களில் நமது குமுதா பள்ளியைச் சேர்ந்த C.R.நேத்ரா என்ற மாணவி 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் Kata மற்றும் Aerosqay fight போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்து இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 
தேசிய அளவில் சாதனை படைத்த மாணவியை  பள்ளித் தாளாளர் திரு.ஜனகரத்தினம் ,துணைத் தாளாளர் திருமதி சுகந்தி ஜனகரத்தினம் , செயலர் டாக்டர் அரவிந்தன்  ,இணைச் செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன்  , விளையாட்டு இயக்குனர் திரு. பாலபிரபு ,முதல்வர் திருமதி.மஞ்சுளா , துணை முதல்வர் திருமதி. வசந்தி , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்