
கோபி அருகே உள்ள மேட்டுவலுவு வீராசாமி வீதியை சேர்ந்த டிரைவர் ஒருவரின் 12 வயது சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிறுமியை கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது
இதை பார்த்த சிறுமியின் உறவினர் சத்தமிடவே, கையில் வைத்திருந்த பையை வீசி விட்டு மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து சென்று உள்ளார்இதனால் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என நினைத்து அவர், அந்த பெண்ணை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து உள்ளார்.சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அங்கு வந்த அந்த பெண் அடுத்த தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த 10 வயது சிறுவனின் கையை பிடித்து அழைத்து சென்று உள்ளார்அப்போது கடைக்கு சென்று இருந்த சிறுவனின் தாயார், மகனை ஒரு பெண் அழைத்து செல்வது குறித்து அதிர்ச்சியடைந்த நிலையில் சத்தமிட்டுள்ளார்பெண்ணின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சிறுவனை அழைத்துச் சென்ற பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்பொதுமக்கள் நடத்திய விசாரணையில், சிறுவனை அழைத்துச்சென்ற பெண், முதலில் கொளப்பலூர் என்றும் பின்னர் ஒத்தகுதிரை என்றும் முரண்பாடான தகவல்களை கூறி உள்ளார்இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் பிடிபட்ட பெண்ணிடம் விசாரணை செய்து கொண்டே, கோபி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.இதற்கிடையே குழந்தை கடத்த வந்த கும்பலை சேர்ந்த பெண் பிடிபட்டுள்ளதாக தகவல் வேகமாக பரவியதுஅதைத்தொடர்ந்து ஏராளமாக பொதுமக்கள் மேட்டுவலுவில் திரண்டு, பிடிபட்ட பெண்ணிடம் சராமாரியாக கேள்விகளை எழுப்பினர்பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்த பெண், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த கோபி காவல்துறையினர், பெண்ணை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.குழந்தைகள் கடத்த வந்ததாக பெண் ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.