

நம்பியூர் அருள்மிகு தாவோ பத்தினி அம்மாள் கணவர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு நான்கு கால யாக பூஜை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன
இதில் ஒரு பகுதியாக நம்பியூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற சிறப்பு தொழுகை நடத்தியும் அதன் தொடர்ந்து பூஜைக்கு தேவையான தேங்காய் பழம் வெற்றிலை உள்ளிட்ட பொருள்களை சிவனுக்கு ஊர்வலமாக வந்து கோவிலில் அர்ச்சகர்ளிடம் ஒப்படைத்தனர்
இந்த நிகழ்வு சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்து உள்ளது என பொதுமக்கள் பக்தர்கள் வெகுவாக பாராட்டினர்.