

நம்பியூர் – திட்டமலை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையரங்கில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் தமிழ்மணி அவர்கள் வரவேற்புரையற்றினர்
முப்பெரும் விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சூரியகாந்தி அவர்கள் தலைமை ஏற்று கல்லூரியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
கணினி அறிவியல் துறையின் தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் வரதராஜன் அவர்கள் விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் யூனஸ் அவர்கள் முப்பெரும் விழாவில் பங்கு பெற்று சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள், கல்லூரி ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினராக மொடக்குறிச்சி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.
எபிநேசர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று மாணவ மாணவியருக்கு கல்வியில் முன்னேற்றத்திற்கான வழிமுறையை விளக்கமாக எடுத்துரைத்தார்.
கல்லூரி விளையாட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்பயிற்சித் துறையின் தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் பாலமுருகன் அவர்கள் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் வாய்ப்புகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினராக கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் கருப்புசாமி அவர்கள் பங்கு பெற்று முத்தமிழின் சிறப்புகளையும் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சியினையும் தெளிவாக மாணவ மாணவியருக்கு விளக்கினார்.
இறுதியாக வணிகவியல் துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர் அ.நாகேந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.
இவ்விழாவினை பொருளியல் துறை, கௌரவ விரைவுரையாளர் முனைவர் மா மங்கள கௌரி, தமிழ்த்துறை ஆசிரியர் க.பரிமளக்குமார். ஆங்கிலத்துறை ஆசிரியர் முனைவர் ஜோதிமணி மற்றும் அவர்களும் தொகுத்து வழங்கினார்கள். முப்பெரும் விழா நாட்டுப்பண் உடன் இனிதே நிறைவு பெற்றது